Adirai Chat Corner

Tuesday, December 9, 2008

கெட்ட நேரத்தை யோசித்தால் இப்படி தான்

ஒரு தடவை இங்கிலாந்து நாட்டின் எட்டாம் எட்வர்ட் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான்.

அதைப் பார்த்த எட்வர்ட் மன்னர். இதோ பார் சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. ராஜகுடும்பத்துக்கு அது அநாகரீகமான விஷயம்னு சொன்னார்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். அந்த பேரனைப் பார்த்து எட்வர்ட், அப்பொழுது என்னமோ சொல்ல வந்தாயே, என்ன அது? சொல் ன்னாரு.

பேரன் அதைச் சொல்லி இனி பிரயோஜனம் இல்லைன்னான்.

மன்னர் பரவாயில்லை சொல்லுன்னாரு.

பேரன் சிரிச்சுகிட்டே, நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்துக் கிடந்துச்சு அதைத் தான் சொல்ல வந்தேன். நீங்க என்னையும் அடக்கிட்டு, பூச்சியையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்கன்னான்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கெட்ட நேரத்தை யோசித்தால் இப்படி தான்"

Post a Comment